தாந்தாமலை மலைப் பிள்ளையாருக்கு மகா கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற  மட்டக்களப்பு  மண்முனை தென்மேற்கு  தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையாருக்கான மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 03.06.2024ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
 
அதனை முன்னிட்டு எதிர்வரும் 30,31.05.2024ஆம் திகதிகளில் கிரியைகள் ஆரம்பமாகின்றன .
 
01,02.06.2024ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும் .
 
தொடர்ந்து மறுநாள் 03.06.2024ஆம் திகதி கும்பாபிசேகம் நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
 
குறித்த காலங்களில் விசேட பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் அடியார்களுக்கு ஆலய அன்னதான சபையினரால் அன்னதான ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Related posts