பெரிய கல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் சிரமதான நிகழ்வு

பெரிய கல்லாற்றினைச் சேர்ந்த அமரர் சந்திரசேகரம் மனோன்மணி அவர்களின் ஞாபகார்த்தமாக 2015 முதல் இன்று வரைக்கும் இவ்வாறானதொரு மகத்தான சிரமதானப் பணியினை முன்னெடுத்துவரும் நிலையில் இவ்வாண்டிற்கான சிரமதான நிகழ்வு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
 
பெரிய கல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் காலை 7 மணிமுதல் மாலை 5மணியளவில் சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் இல்லத்தில் நடப்பட்டிருக்கும் பூ மரங்களுக்கு நீர் பாச்சுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நீர்த்தாங்கி பெரிய கல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர்ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜாஅவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் சிரம தான நிகழ்வில் பங்கேற்ற பணியாளர்களுக்கு ஊழிய நிதியும்,அரிசிப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 

Related posts