இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

மேல் மாகாணம் உட்பட சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது

நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை பொழிய கூடும் என வளிமண்டலத் திணைக்களத்தின் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts