உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக மல்லாகம் நீதவான் விசாரணை ஆரம்பம்

துப்பாக்கி சூட்டின் காரணமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்த இடத்திற்கு      மல்லாகம்  நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜீ.அலெக்ராஜா சென்று விசாரணை மேற்கொண்டார்.
இன்றைய தினம்(3)   மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என்.நஸிர் 91757 (வயது 25) என்பவர் தன் வசம் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததனால் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நீதிவான் விசாரணை மேற்கொண்டதுடன் தடயப்பொருட்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தடயவியல் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது  தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts