கடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் முறாவோடை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை கடலில் நீராடச் சென்று காணாமல் போன 15வயது மாணவனின் சடலம், இன்று விநாயகபுரம் சவுக்கடி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவனின் சடலம் கரை ஒதுங்கியதை பெற்றோர்கள் அடையாளப்படுத்தினர். சம்பவம் தொர்பில் திருக்கோவில் பொலிசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று திருக்கோவில் பொலிசார் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் இ.வி.கமலராஜன் ஆகியோர் சடலத்தை பார்வையிட்டனர். சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை (12) மாலை தனியார் வகுப்பிற்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் கடலில் விளையாடிக் கொண்டிருந்தவேளை கடல் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளளான். சம்பவ தினத்தில் இருந்து பெற்றோர்கள் தங்களது மகளை தேடிவந்த நிலையில் குறித்த மாணவன் இன்று சடலமாக கரையொதிங்கியுள்ளான்.

சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு சடலமாக கரையொதுங்கியது திருக்கோவில் சக்தி வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி கற்று வரும் விநாயகபுரம் 01 கலைமகள் வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய நிக்சன் நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டள்ளது

Related posts