கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கு 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வடக்கு பகுதியில் குறித்த மீனவர்கள்(திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் செவ்வாய்கிழமை) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போதே மல்லாகம் நீதிமன்றம் குறித்த ஏழு பேருக்கும் 7 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், இவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், கைப்பற்றப்பட்ட படகுகளைப் பறிமுதல் செய்வதா அல்லது அபராத தொகை விதிப்பதா என்பது தொடர்பில் எதிர்வரும், செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

Related posts