1,248 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சுமார் 1,248 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் பொலிஸ் போதையொழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுபோவில ப்ரதிம்பாராம மாவத்தையில் பயணித்த ஜீப் வண்டியொன்று சோதனையிடப்பட்டுள்ளது.

இதில், ஹெரோயின் அடங்கிய 30 பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பத்தரமுல்ல சுபூத்திபுரவிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த வீட்டிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் அடங்கியதாகக் 66 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 103 கிலோ 948 கிராம் ஆகும்.

சந்தேகநபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts