இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

 

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி.
 

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இரண்டு லொரி நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய லொறியின் சாரதி ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது:-மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(27)அதிகாலை 1.30 மணியளவில் பொலநறுவை பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஆடைகளை ஏற்றி வந்த லொறியும்,மரங்களை ஏற்றி வந்த மற்றுமொரு லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பெலன்னறுவை பிரதேசத்தில் இருந்து வந்த லொறி சாரதி பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மரம் ஏற்றி வந்த லொரி சாரதி தப்பி ஓடியுள்ளார்.இரண்டு லொறிகளும் சேதமேற்பட்டுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts