இலங்கையில் மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சித்திரைப் புத்தாண்டு காலத்தில், மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரையில் மாத்திரமே மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், போஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts