இலங்கை முழுதும் அவசர ஊரடங்கு உத்தரவு!

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts