ஊடகவியலாளுரும், அறிவிப்பாளரும் ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் ஊடகத்துறைக்காக இளம் கலைஞர் விருதும்,

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் இலக்கிய விழாவின் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வினையொட்டி தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று(15) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.நவனீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது ஊடகவியலாளுரும், அறிவிப்பாளரும் ஆசிரியருமான எம்.ஏ.றமீஸ் ஊடகத்துறைக்காக இளம் கலைஞர் விருதும், மாகாண மட்டத்தில் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான போட்டியில் புகைப்படத் துறைக்காக முதலாமிடத்தினையும் பெற்றுக் கொண்டார். இதன்போது இவருக்கான காசோலை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதியசராஜ் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts