எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடப் போவதில்லை

எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடப் போவதில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காவிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை , எதிர்வரும் வாரமளவில் எதிர்க்கட்சி அலுவலகத்தை பெற நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts