ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடலில் மூழ்கிய பரிதாபம்

அம்பலன்கொட பிரதேசத்தின் கடற்கரையொன்றில் நீராடிக்கொண்டிருந்த 6 பேர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது , ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இடத்தில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டு பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்தது.

Related posts