கேரளாவில் எலிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

கேரளாவில் பரவி வரும் எலிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளது.

கேரளாவில் அண்மையில் பெய்த வரலாறு காணாத கனமழையால் 488 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மழைக்குப் பின்னரான தொற்றுநோய்கள் கேரளாவை அச்சுறுத்தி வருகின்றன.

எலிக்காய்ச்சல் அங்கு மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், எலிக்காய்ச்சலால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நோய் பரவும் வீதம் தீவிரமடைந்துள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts