சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்குவதற்காக பயனாளிகளைத் தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் -களுவாஞ்சிக்குடியில்

சுவிஸ் உதயத்தின் மூலம் உதவி வழங்குவதற்காக பயனாளிகளைத் தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் சுவிஸ் உதயத்தின் களுவாஞ்சிக்குடி அலுவலகத்தில் திங்கட்கிழமை 26 ஆம்திகதி பிரதித் தலைவரும் உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த  பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர்

இதன்போது சுவிஸ் உதயத்தின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கணக்காளர் நாகேந்திரன்,ஊடகவியலாளர் சா.நடனசபேசன் உட்பட சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

 

Related posts