திருகோணமலை பிரதேச கடற்பரப்பில் 24 பேர் கைது

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (22) திருகோணமலை பிரதேச கடற்பரப்பில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே, இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களிடமிருந்து நான்கு இயந்திரப்படகுகளும், தடை செய்யப்பட்ட சில மீன்பி​டி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts