புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கும் முன்னாள் போராளிகளுக்கிடையிலான ஒன்றுகூடல்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கும் முன்னாள் போராளிகளுக்கிடையிலான ஒன்றுகூடல் இன்று 20 மன்னார் மாவட்டத்தின் ஆண்டங்குளம் பிரதேசத்தில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைத்துக் கொள்கின்றமை தொடர்பாகவும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் ஜீவனோபாயம் போன்ற விடயங்கள் சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலங்களில் கட்சி ரீதியாக மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள அபிவிருத்திகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
அத்துடன் எதிர்வரும் 29/7/2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இல. 01 வேணாவில் புதுக்குடியிருப்பு பிரதேச காரியாலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட போராளிகளுக்கான ஒன்று கூடல் நடைபெறவிருப்பதாக கட்சியில் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts