புளியந்தீவு தெற்கு வட்டார அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகரசபையினால் அபிவிருத்தி செயற்திட்டங்களை மக்கள் முன்மொழிவுகளுடன் உட்படுத்தும் முகமாக வட்டாரங்கள் ரீதியாக மக்களின் பங்களிப்புடனான அபிவிருத்தி செயற்திட்டங்களை வடிவமைத்தல் என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் வட்டாரங்கள் தோறும் மக்கள் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் பளியந்தீவு தெற்கு 18ம் வட்டாரத்திற்குரிய கலந்துரையாடல்  அவ்வட்டாரத்தின் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், புளியந்தீவு தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட மாநகரசபை உத்தியோகத்தர்கள், புளியந்தீவு தெற்கு வட்டார பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 இதன் போது எதிர்வரும் காலங்களில் மாநகரசபையினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களில் மக்களின் முன்மொழிவுகள், அவர்களின் முதண்மைப்படுத்தல்கள் என்பன பற்றி கேட்டறியப்பட்டது. இதனடிப்படையில் வீதிகள், வடிகாண்கள், கழிவகற்றல் உட்பட மாநகரசபையினால் மேற்கொள்ளப்படக் கூடிய விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts