பேராசிரியர்கள் தப்பிக்க முடியாது; எதிராக சட்ட நடவடிக்கை !

வெளிநாடுகளுக்கு பட்டப்படிப்பிற்காக சென்று மீண்டும் நாடு திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிர் கல்வியமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைச்சு மேலும் தெரிவித்திருப்பதாவது,

வெளிநாடு சென்று ஒருவர் பட்டப் படிப்பு படிப்பதற்காக அரசாங்கம் ஒருவருக்கு பாரிய தொகையை செலவிடுகின்றது. இது தவிர பட்டப்படிப்பு காலத்தில் சம்பளமும் வழங்கப்படுகிறது. எனினும் படிப்பினை நிறைவு செய்த அவர்கள் மீண்டும் நாடு திரும்பாத காரணத்தால் ஆண்டொன்றுக்கு அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக பட்டப்படிப்பு நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பாத பேராசிரியர்களிடம் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts