பணிப்புறக்கணிப்பால் பல தொடரூந்து சேவைகள் இரத்து

சில தொடரூந்து சங்கள் இணைந்து இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தன.

தொடரூந்து திணைக்களத்தின் காணி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை முன்னிறுத்தி அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பால் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணிவரை கொழும்பு கோட்டை மற்றும் மருதானை தொடரூந்து நிலையங்களில் இருந்து ஆரம்பமாகவிருந்த பல தொடரூந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இதனால் பயணிகள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் மாலை 4.00 மணிக்கு பின்னர் வழமை போல் தொடரூந்து சேவைகள் இயங்குவதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts