மட்டக்களப்பில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி கையெழுத்து வேட்டை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம்  ரூபாயாக உயர்த்துமாறு கோரி முற்போக்கு தமிழர் அமைப்பு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் கவனயீர்பு ஆர்ப்பாட்டமும் கையெழுத்து வேட்டையும் நேற்று  வியாழக்கிழமை (28) இடம்பெற்றது

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கையெழுத்துவேட்டையும் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானேர் கலந்து கொண்டு பெரும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா உயர்த்தப்படவேண்டும். பெரும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து கொடுக்கப்படவேண்டும் . போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்ட்டத்தில் ஈடுபட்டடனர் 

இதனைத் தொடர்ந்து பெரும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த கையெழுத்து வேட்டை பின்னர் கடைகள் மற்றும் வீதிகளில் பிரயாணிப்போரிடம் ஆதரவுதேடி கையெழுத்து பெறப்பட்டதுடன் 

கிழக்கில் இருந்து 10 ஆயிரம் கையெழுத்து பெறப்பட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்திய தூதரகம் , பிரித்தாணியா தூதரகங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

Related posts