மாட்டுடன் மோதியதில் பாரிய விபத்து

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் நேற்று இரவு சிறியரக வான் எருமை மாட்டுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து மண்டூரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வான் கட்டுப்பாட்டை இழந்து பிர தான வீதியினை கடக்க முற்பட்ட எருமை மாட்டுடன் மோதியதில் இரண்டு எருமைமாடுகள் ஸ்த்தலத்தில் பலியாகியுள்ளது.

 

இவ்விபத்தில் வான் பாரிய சேதங்களுக்குள்ளாகி உள்ளதோடு சம்பவம் பற்றிய விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts