கல்முனை ரெலிக்கோம் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி முகாமையாளர் தேவரெத்தினம் ஓய்வு

கல்முனை ரெலிக்கோம் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி முகாமையாளர்  முத்துக்குமார் தேவரெத்தினம் அவர்கள் 36 வருட சேவையில் இருந்து இன்று 27 ஆம் திகதி வியாழக்கிழமை ஓய்வு பெறுகின்றார்.

துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியினை துறைநீலாவணை மெதடிஸ்தன்மிஷன் தமிழ்க் கலவன்  பாடசாலையில் ஆரம்பக்கல்வியினைக் கற்ற இவர் 1983.01.17 ஆம் திகதி ரெலிக்கோம் நிறுவனத்தில் எழுதுவினைஞராக தனது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் கொழும்பு, மட்டக்கப்பு,கல்முனை அம்பாரை ஆகிய இடங்களில் கடமையாற்றியதுடன் 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மற்றும் அம்பாரை ரெலிக்கோம் நிறுவனத்தின் பிரதிமுகாமையாளராகவும் கல்முனை ரெலிக்கோம் நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதி முகாமையாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெறுகின்றார்

இவர் துறைநீலாவணை தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னாள் தலைவராகவும் துறைநீலாவணைக் கிராமத்தின் பல்வேறுபட்ட சமூகமட்ட அமைப்புக்களின் ஆலோசகராகவும் செயற்பட்டுவரும் இவர் சிறந்த நாடகக் கலைஞரும் ஆவார்.

Related posts