யானைக்குப் பயந்து ஓடியவர் மின்சாரவேலியல் சிக்குண்டு பலி

சா.நடனசபேசன்

 
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39 ஆம் கிராமத்தில் யானை வராமல்  அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்குண்டு 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளிப் பொலிசார்தெரிவித்தனர்.
 
இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் 39 ஆம் கொளனி ஈயாக்காலைப் பகுதியினைச் சேர்ந்த 50 வயதினை உடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
 
இவர் தனது வயலில் இருக்கும் வாடிக்குச் செல்லும்போது அப்பகுதியில் நின்ற யானையினைக் கண்டு பயத்தினால் ஓடியபோது வயலில் யானை வராமல் அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியில் சிக்குண்டமையால் மின்சாரம் தாக்கி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்
 
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் அவர்கள் விசாரணைகளின்  பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி தடயவியல் பொலிஸார் மற்றும் வெல்லாவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 
 
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts