‘10 வருட அபிவிருத்தியை 10 மாதத்தில் செய்யத் தயார்’

10 வருடத்துக்குள் செய்யத் திட்டமிட்டிருந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்வரும் 10 மாதத்துக்குள் செய்யவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று தனது அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலங்களில் வீடமைப்பு மற்றும் கட்டுமாணத்துறையைப் போல கலாசார விடயங்களிலும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே தனது நோக்கமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts