3,711 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் மூலம், 3,711 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஏற்கென​வே பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டிருந்த 938 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 768 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்த திடீர் சுற்றிவளைப்பில், 17,213 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts