போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டு கழகம்,மற்றும் பலாச்சோலை கருணை விளையாட்டு கழகங்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டு உபகரணங்கள் ஒருதொகுதி புதன்கிழமை(19)மாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.காக்காச்சிவட்டை இளங்குயில் விளையாட்டுக்கழகமும்,பலாச்சோலை கருணை விளையாட்டுக்கழகமும் இணைந்து இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்தவிசாளர் இரா.சாணக்கியன் அவர்களிடம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமைப்பின் தவிசாளரினால் இரண்டு விளையாட்டுக் கழக்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது விளையாட்டுக் கழகத்தின் தலைவர்,செயலாளர் ,விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உபகரணங்களைக் பெற்றுக் கொண்டார்கள்
Related posts
-
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில்... -
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள்... -
சுவிஸ் உதயம் அமைப்பினால் குடிநீர் வசதி
கடந்த மாதம் மட்டக்களப்பு சந்திவெளி கிராமத்தில் துவிச்சக்கர வண்டி வழங்கிய மாணவர்கள் ஒருவரின் குடும்பத்தின் குடிநீர் வசதியிற்கான வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ்...