அமைச்சரின் மகன் செலுத்திய கார் வீடு ஒன்றை உடைத்து பாரிய விபத்து! 4 பேர் படுகாயம்!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இவ்விபத்தில் யசோத பண்டார உட்பட் நால்வர் காயமடைந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் கோட்டப்பிட்டிசந்தியுள்ள வீட்டின் மதில் ஒன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் சிலாபம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் யசோத ரங்கே பண்டார மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts