இலங்கைக்கு தப்பிவர முயற்சித்த இந்திய தமிழர்கள் 4 பேர் கைது!

இலங்கைக்கு தப்பிவர முயற்சித்தக் குற்றச்சாட்டில் தமிழகம் மண்டபம் காவற்துறையினரும், கியு பிரிவு காவற்துறையினரும் இணைந்து, நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு வர முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைதானவர்கள் கமல் என்ற 26 வயதான இளைஞரும், அவரது மனைவி கங்காவும் 5 வயதான அவர்களது குழந்தையுடன், கமலின் சகோதரர் லோகிதாஸ் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் இந்திய பிரஜைகள் என்றும், டெல்லி மதன்கிரியில் வசித்து வந்தவர்கள் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்வந்த படகோட்டியை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts