ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் ஊடக அடக்குமுறை மற்றும் ஊழல்வாதிகள் தொடர்பாக விசாரணை நடாத்துமாறு கோரி மட்டக்களப்பில்19 ஆம் திகதி வியாழக்கிழமை   ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால்  இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்த இவ் ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் பெண்கள் அமைப்புகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன், மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன், மட்டகளப்பு மாவட்ட பொதுஜென பெரமுன அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

Related posts