கிழக்கில் கேலி! வடக்கில் போலி! இவர்கள் குறித்து அவதானம் தேவை – எம்.ஏ.சுமந்திரன்

கிழக்கில் கேலியாக பேசும் ஒருவர் வடக்கில் போலியான அமைச்சர் ஒருவர் இவர்களின் நடவடிக்கை தொடர்பாக இப்போது அவதானம் தேவை.

பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் எமக்கு ஆழமான சந்தேகங்கள் உள்ளன.. எனவே, இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, இன்னொருவர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைத்தூக்கியுள்ளார். இவர் தன்னை ஓர் அமைச்சராக தெரிவித்துக்கொண்டு,  ”நான் மீண்டும் வந்துட்டேனு சொல்லு” என்று ஒரு சினிமா நடிகரின் தொணியில் கூறியுள்ளார். இந்த போலி அமைச்சரின் கட்சியினராலேயே அங்கு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனவே இவை தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts