ஆட்டோவில் யுவதியை கடத்திய இளைஞர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

ஆட்டோவில் யுவதியொருவரைக் கடத்த முற்பட்ட போது குறித்த யுவதி சத்தமிட்டு கூக்குரல் எழுப்பியவாறு ஆட்டோவில் பயணித்ததைக் கண்ட பொதுமக்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று இடையில் வழிமறித்து அவ் யுவதியை காப்பாற்றியுள்ளதுடன் அவ் யுவதியை கடத்த முற்பட்ட மூன்று இளைஞர்களை மடக்கிப்பிடித்துபொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று(01) சனிக்கிழமை காலையில் களுதாவளையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது…

களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்;கு பிள்ளையார் விரதம் பிடிப்பதற்காக வருகைதந்த போரதீவைச் சேர்ந்த யுவதியொருவரை ஆட்டோவில் வந்த மூவர் இடையில் வழிமறித்து பலவந்தமாக அவரது வாயைப்பொத்தியவாறு ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் வேகமாகப் பயணித்துள்ளனர். இந் நிலையில் குறித்த யுவதி அவர்களின் கையை உதறிவிட்டு பலமாக சத்தமிட்டவாறு கத்தியுள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று மடக்கிப்பிடித்துள்ளனர். ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூன்று இளைஞர்களை களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

காதல் விவகாரமே என தெரிய வருகிறது

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஆலயத்திற்கு வருகைதந்நத யுவதியை கடத்த முற்பட்டசம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts