குண்டுத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானொரின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகளில், குண்டுத்தாக்குதலில் காயமடைந்த 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் எனவும், குறித்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றவந்த இருவர் நேற்று (22) இ​ரவு உயிரிழந்துள்ளனர் என, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts