கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருதமுனையில் தொற்றுநீக்கி தெளிக்கும் செயற்திட்டம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருதமுனைப் பிரதேசத்தில் இரசாயண தொற்றுநீக்கி தெளிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
 
மருதமுனை வைத்தியசாலை-பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களில் இத்திட்டம் திங்கட்கிழமை(23)  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் றைடஸ் கப் எனும் அமைப்பு இதனை முன்னெடுத்துள்ளது.

Related posts