பொறுப்புக் கூறலிலிருந்து இலங்கையை தப்பிக்க விடமாட்டோம் – கூட்டமைப்பு

பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து இலங்கையை ஒருபோதும் தப்பிக்க விடமாட்டோம் என தமிழத் தேசியக் கூட்டமைப்பு கூறியள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் கூறியுள்ளது.

ஐ.நா. சபையில் இலங்கை இராணுவத்தினரைக் காப்பாற்ற இலங்கை ஜனாதிபதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அது குறித்து ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

தற்போதைய நிலையில் அரசாங்கம் தேர்தலிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும், இதனால் அரசியல் தீர்வு கேள்விக்குறியாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதுமாத்திரமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா. சபையில், இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படவுள்ளதால், தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா? போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

இரு தடவைகள் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து ஐ.நா. பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதாகவும், எனவே இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றும் கூறினார்.

Related posts