தங்க நகைகளை திருடி வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில்

திருகோணமலையில் ஒரு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாய் பெருமதியான தங்க நகைகளை திருடி வைத்திருந்த நபர் ஒருவரை அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு 22  திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்

பாலையூற்று, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வேறு ஒரு நபர் திருடிய தங்க நகைகளை குறித்த சந்தேக நபர் வைத்திருந்த நிலையில் உப்புவெளி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்திய போதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, தங்க நகைகள் திருடிய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருப்பதுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்

Related posts