ரயில் பெட்டிகளில் தீ பரவல்

தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலின் சில பெட்டிகளில் தீ பரவியுள்ளது.

திருத்தப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட 2 ரயில் பெட்டிகளிலேயே இவ்வாறு தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டது.

Related posts