தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை அரசாங்கம், பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. 
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். 
அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரை தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். 
கூட்டுத்தாபனம், நியாயாதிக்கசபை நிறுவனங்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு இந்த 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் கயந்த கருணாதிலக தொடர்ந்து தெரிவிக்கையில், எமது அரசாங்கத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான தேசிய வேதன சம்பள கொடுப்பனவிற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாக செலுத்தப்பட வேண்டும். 
இந்த அடிப்படை சம்பளமான 10,000 ரூபா 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்காக அதாவது 2,500 ரூபாவால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு என்னால் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கிகாரத்தை பெற்றுக்கொண்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சட்ட வரைவிற்காக அந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நான் சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 
இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஆக குறைந்த சம்பளம் தற்போது நடைமுறையில் உள்ள 2005 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிவாரணத்திற்கு உட்பட்டவகையில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் 16,000 ரூபாவாக அதிகரிப்பதாக தெரிவித்தார். 
இதற்கு மேலதிகமாக நிர்வாகம் மற்றும் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பள அதிகரிப்பு சபையின் மூலம் இதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கு அமைவான 2019 ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பு சபை சம்பள அதிகரிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 
இந்த நடைமுறைகளுக்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பிற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts