சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானம்


சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டிலும் மகளீர் அமைப்புத் தலைவிசெல்வி அவர்களது ஒழுங்கமைப்பில் கொம்மாதுறை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இச் சிரமதான நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் மற்றும் அவ் ஆலயத்தின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் உட்பட சுவிஸ் உதயத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.
பின்தங்கிய பிரதேசங்களுக்கு இவ்வாறான சிரமதான நிகழ்வுகளை ஒழுங்குசெய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ,செயலாளர் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் தலைவர் நன்றிதெரிவித்துள்ளனர்.

Related posts