பஸ்ஸூக்குள் சடலம்

கம்பஹா – உடுகம்பொல – கெஹெல்பத்தார பகுதியில்,  (15) சிறிய ரக பஸ் ஒன்றில் இருந்து, கருகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சாரதியின் இருக்கைக்கு அருகில் இருந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 58 வயது நிரம்பியவரென தெரியவந்துள்ளது.

அத்துடன், சடலமாக மீட்கப்பட்டவரின் பஸ் உரிமையாளரின் மனைவி என, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts