பெரியநீலாவணை விபத்தில் ஒருவர் பலி

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவனை  கல்முனை மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில்   ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு முன்பாக  இடம்பெற்ற இவ்விபத்து லொறியொன்றும்இ முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றது இந்தவிபத்தில் முச்சக்கரசண்டியின் சாரதியான  பெரிய நீலாவணை தொடர் மாடிப்பிரசேத்தில் வசிக்கும்  ஆறுமுகம்  சுபராஜ் வயது 37  எனபவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts