மைத்திரிக்கு ஆதரவளிக்கமாட்டோம்!

வரலாற்றில் எந்த தலைவர்களும் நடைமுறைப்படுத்தாத மரணதண்டனை அமுலாக்த்தை தற்போது நடைமுறைப்படுத்தினால் நாம் அதற்கு ஆதரவளிக்கமாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் மாரிஅறாவ நீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

அரசியலமைப்பில் மரண தண்டனை தொடர்பான சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டாலும் வரலாற்றில் எந்த தலைவர்களும் அதனை நடைமுறைப்படுத்வில்லை.2016 ஆம ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மரண தண்டனையை தடைசெய்வதற்கான யோசனையை முன்வைத்தபோது அதற்கு இலங்கையும் இணக்கம் தெரிவித்தது. அந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் அன்று ஆதரவளித்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts