புதிய கூட்டணி ஒன்றின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறித்த சி.வி கருத்து!

அடுத்த மாகாண சபை தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னுடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் கூட்டணி ஒன்றின் மூலம் போட்டியிடவுள்ளேன்.

எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன்.

முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன்.

எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts