வீடென்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது ! பணமும் நகையும் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது .  இதையடுத்து  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   எம்.கே .இப்னு அஷார் தலைமயில் பெருங்குற்ற பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்  விஜயராஜா , பொலிஸ் கொஸ்தாபல் லோகேஸ்வரன் , தாஹா , பரீட் உட்பட பொலிஸ் குழுவினர் நேற்றிரவு மூவரை கைது செய்தனர் . அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது  இதனுடன் சம்பந்தப்பட்ட  மேலும் ஐவர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு  14  நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .
நேற்றிரவு மீண்டும் தேடுதலின் போது   நகைகளை வாங்கிய இரு நபர்களை கைது செய்துள்ளதுடன் சுமார் ஆறு லட்சம் பெறுமதியான நகைகள் கைப்பற்றபட்டுள்ளது . இவை அனைத்தும் திங்கட்கிழமை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது 

Related posts