குளக்கரைக்குச் சென்ற மாட்டை உணவுக்காக அடித்து இழுத்துச் சென்ற முதலை

மட்டக்களப்பு பெரியபோரதீவுக் குளக்கரைக்குச் சென்ற மாடு ஒன்றை குளத்தில் பதுங்கியிருந்த முதலை ஒன்று அம்மாட்டை அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எருமை மாடுகள் அக்குழக்கரையில் மேய்வதும், அக்குளத்தில் உறங்குவதும் வழக்கம். அதுபோல் இன்றயத்தினமும் எருமை மாடு ஒன்று அக்குளத்திற்குச் சென்ற வேளை அதனை அதனை முதலை அடித்து இழுத்துச் சென்ற  காட்சி பதிவாகியுள்ளது.

இதனை அவதானித்த பயணிகள், முதலையை துரத்துவதற்கு முற்பட்டுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாத முதலை மாட்டை அடித்து இழுத்துச் சென்றதாக இதனை நேரில் கண்ட பிராயாணிகள் தெரிவித்தனர்.

Related posts