5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்

5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படும் முறையில் மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத்திட்டத்தின் கீழ் உடவளவ பிரதேச பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்​வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சையில் காணப்படும் போட்டித் தன்மையை இல்லாது செய்வது தொடர்பில், ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts