நாட்டில் டெங்கு நோயின் அபாயம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 62,111 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்திலேயே அதிகளவானோர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 10,238 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 13,218 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 10,043 பேர் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts