அடுத்த ஜனாதிபதி தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

முன்னாள் சபாநாயகரும் மஹிந்தவின் சகோதரருமான சமல் ராஜபக்ஷ போன்ற ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற பொசன் நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது சமல் ராஜபக்ஷ அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகுவர் என்பது தற்பொழுது கிடைத்த மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

இதை உண்மையிலேயே நாம் அறிந்திருக்கவில்லை. நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை நாடு நாசமடைந்தற்கு ஐக்கிய தேசிய கட்சியே பொறுப்புக் கூறவேண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts