அனர்த்த நாட்களில் பாடசாலைகளை நடத்துவது  தொடர்பான அதிகாரம்  மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம்

மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அனர்த்த நாட்களில் பாடசாலைகளை நடத்துவது  தொடர்பான அதிகாரம்  மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலைக் காரணமாக, வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளை நடத்துவது தொடர்பான அதிகாரம் மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலமைகள் காரணமாக, பாடசாலைகளை நடத்தமுடியாத நிலமைக் காணப்படின், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் அது தொடர்பில், மாகாண அல்லது வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து, இது குறித்தத் தீர்மானத்துக்கு வரவேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts