அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சினூடாக அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் (22) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் சிhழேந்திரன், அமைச்சின் செயலாளர் ஏ. சேனநாயக, மேலதிக செயலாளர் கலாநிதி. எஸ். அமலநாதன் ஆகியோர் விசேடமாக கலந்து கொண்டு திட்ட முன்மெழிவுகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.

இதன்போது இரஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த வரவு செலவுத்திட்டத்திற்கமைய பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் அம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, திருகோணமலை, அம்பாரை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு பசளை தயாரிப்பு தொடர்பான உபகரணங்கள் கொள்வனவு மற்றும் அது தொடர்பான திட்டங்களுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 27.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இம்மாவட்டத்திற்காக விவசாய அமைச்சினால் உழுந்து போன்ற பயிர்கள் செய்கை பன்னுவதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் உற்பத்தி, ஆடு வளர்ப்பு போன்றவற்றுக்காக தலா 100 மில்லியன் ரூபா நாடுதளுவிய ரீதியில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இதுதவிர விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக உரம் உற்பத்தி மற்றும் களஞ்சியம் அமைத்தல் போன்ற திட்டங்களுக்காக சுமார் 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார். 

இவற்றை நடைமுறைப்படுத்ததுவதற்கான திட்ட முன்மொழிவுகள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் விவசாய, கால்நடை அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளின் கருத்துக்களும் ஆராயப்பட்டன. 

இக்கூட்டத்தில் மவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, 14 பிரதேச செயலகங்களின் செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி திணைக்களங்களின் அதிகாரிகள் உட்பட அரச உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts